ETV Bharat / state

பண்டாரத்தி பாடலுக்குத் தடை கோரிய வழக்கு - நடிகர் தனுஷுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

author img

By

Published : Mar 23, 2021, 7:19 PM IST

Updated : Mar 23, 2021, 7:32 PM IST

மதுரை: கர்ணன் படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி பாடலை நீக்கும்வரை படத்தை வெளியிடத் தடை கோரிய வழக்கில் நடிகர் தனுஷ், இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தணிக்கைத் துறை மண்டல அலுவலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai high court
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

விருதுநகர் பகுதியைச் சேர்ந்த ராஜா பிரபு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "கடந்த ஜனவரி 19ஆம் தேதி இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் 'கர்ணன்' திரைப்படத்தின் டீசரும் 'கண்டா வரச்சொல்லுங்க' என்னும் பாடலும் யூ சான்றிதழ் அனுமதியுடன் வெளியிடப்பட்டது.

அதேபோல 'பண்டாரத்தி' என்னும் பெயரில் பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பாடலில் 'பண்டாரத்தி என் சக்காளத்தி' என்னும் வரிகள் இடம்பெற்றுள்ளன. ஆண்டி பண்டாரம் என்பது மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த ஒரு சமூகம். இந்துக்களைப் பொறுத்தவரை பெண்களை மரியாதையாக அம்மா என்று அழைத்துவருகின்றனர். இந்நிலையில் கர்ணன் படத்தில் எங்களது இனப் பெண்களை இழிவுபடுத்தும்விதமாக சொற்கள் அமைந்துள்ளன.

மேலும் எங்கள் சமூகத்தைக் காயப்படுத்தும்விதமாக கர்ணன் திரைப்படத்தில் பண்டாரத்தி புராணம் பாடல் இடம்பெற்றுள்ளது. இது விதிகளுக்கு எதிரானது. மேலும் முறையான அனுமதி சான்றிதழ் பெறாமல் 'பண்டாரத்தி என் சக்காளத்தி' என்ற பாடல் யூ-ட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது.

இது சட்டவிரோதமானது. ஆகவே, 'பண்டாரத்தி' பாடலை கர்ணன் படத்திலிருந்து நீக்கும் வரை படத்தை வெளியிட இடைக்காலத் தடைவிதிக்கவும், 'பண்டாரத்தி' பாடலை நீக்கிய பிறகு படத்தை வெளியிட உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு குறித்து நடிகர் தனுஷ், கர்ணன் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தணிக்கைத் துறை மண்டல அலுவலர், ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:யூ-ட்யூபில் சாதனைப் படைக்கும் 'எஞ்சாயி எஞ்சாமி'!

விருதுநகர் பகுதியைச் சேர்ந்த ராஜா பிரபு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "கடந்த ஜனவரி 19ஆம் தேதி இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் 'கர்ணன்' திரைப்படத்தின் டீசரும் 'கண்டா வரச்சொல்லுங்க' என்னும் பாடலும் யூ சான்றிதழ் அனுமதியுடன் வெளியிடப்பட்டது.

அதேபோல 'பண்டாரத்தி' என்னும் பெயரில் பாடல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பாடலில் 'பண்டாரத்தி என் சக்காளத்தி' என்னும் வரிகள் இடம்பெற்றுள்ளன. ஆண்டி பண்டாரம் என்பது மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த ஒரு சமூகம். இந்துக்களைப் பொறுத்தவரை பெண்களை மரியாதையாக அம்மா என்று அழைத்துவருகின்றனர். இந்நிலையில் கர்ணன் படத்தில் எங்களது இனப் பெண்களை இழிவுபடுத்தும்விதமாக சொற்கள் அமைந்துள்ளன.

மேலும் எங்கள் சமூகத்தைக் காயப்படுத்தும்விதமாக கர்ணன் திரைப்படத்தில் பண்டாரத்தி புராணம் பாடல் இடம்பெற்றுள்ளது. இது விதிகளுக்கு எதிரானது. மேலும் முறையான அனுமதி சான்றிதழ் பெறாமல் 'பண்டாரத்தி என் சக்காளத்தி' என்ற பாடல் யூ-ட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது.

இது சட்டவிரோதமானது. ஆகவே, 'பண்டாரத்தி' பாடலை கர்ணன் படத்திலிருந்து நீக்கும் வரை படத்தை வெளியிட இடைக்காலத் தடைவிதிக்கவும், 'பண்டாரத்தி' பாடலை நீக்கிய பிறகு படத்தை வெளியிட உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு குறித்து நடிகர் தனுஷ், கர்ணன் திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தணிக்கைத் துறை மண்டல அலுவலர், ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:யூ-ட்யூபில் சாதனைப் படைக்கும் 'எஞ்சாயி எஞ்சாமி'!

Last Updated : Mar 23, 2021, 7:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.